
டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது.
இதையடுத்து அவர் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சி பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனால் விராட் கோலி - பிசிசிஐ இடையே மோதல் இருப்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் கபில் தேவ், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியபோது அதிக சுமையைத் தாங்குவதாகப் பலரும் கருதினோம். கேப்டன் பதவியை விட்டு விலகவேண்டும் என யாரும் எண்ணவில்லை. அற்புதமான வீரர். அவருடைய முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும்.