
இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்பட்டவர் கருண் நாயர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் முற்சதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் கருண் நாயர் படைத்துள்ளார். ஆனால் அதன்பின், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரே அடியாக ஓரங்கட்டப்பட்டார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் தனது கம்பேக்கிற்காக கடுமையாக உழைத்துவரும் கருண் நாயர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்தாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணிக்காக விளையாடிய அவர், 690 ரன்களைக் குவித்ததுடன் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.
அதுமட்டுமில்லாமல் மஹாராஜா கோப்பை டி20 தொடர், சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே மட்டுமின்றி இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பினை பெற கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில், நான் இப்போது விளையாடும் விளையாட்டுதான் மிக முக்கியமான விளையாட்டு என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார்.