
பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்ற முடிந்த நிலையில், இப்போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டி முடிந்து பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும்போது, சில ரசிகர்கள் வீரர்கள் குறித்து தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையெல்லாம் கேட்ட குஷ்தில் ஷா தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரும்பி ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். மற்ற வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் குஷ்தீல் ஷாவை தடுக்க முயன்ற நிலையிலும், அவர் ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.