
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படவுள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக கேப்டன்சி மேற்கொண்டார்.
அதேபோல் இந்த ஒருநாள் அணியில் ரஜத் படிதர், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சஹால், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டிருப்பதால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய கேஎல் ராகுல், “ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நினைக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை புதிய இளம் வீரர்கள் நிரப்புவதற்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.