Advertisement

ENG vs IND: கே.எல்.ராகுலிற்கு அபராதம்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக கே.எல்.ராகுலிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 05, 2021 • 14:53 PM
KL Rahul Fined For Showing 'Dissent' Towards Umpires On Day 3
KL Rahul Fined For Showing 'Dissent' Towards Umpires On Day 3 (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ரோஹித் ஷர்மாவை விட ஒருபடி வேகமாகவே விளையாடிய லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி வெளியேறினார். ஆனால், மைதானத்தை விட்டு வெளியேறும் வரை, அவர் தான் அவுட்டானதை ஒப்புக் கொள்ளவேயில்லை. 

Trending


அதாவது, ஆண்டர்சன் ஓவரில் அவர் பந்தை எதிர்கொள்ள தயாரான போது, அவரது பேட் அவரது பேடின் பின்பகுதியை உரசி முன்னாள் வந்தது. இதனால், பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலி எழுந்தது. இங்கிலாந்து வீரர்களும் ஸ்ட்ராங்காக அவுட் அப்பீல் செய்தனர். தொடர்ந்து ரிவ்யூ கேட்கப்பட, அப்போது தான் பந்து பேட்டிங் பின்புறம் மிக மிக லேசாக உரசிச் சென்றிருப்பது தெரிந்தது.

ஆனால், ராகுல் தனது பேட் பேடில் உரசியதால் தான் சப்தம் கேட்டது என்பதில் உறுதியாக இருந்தார். அது உண்மையும் கூட. ஆனால், அவர் அந்த மனநிலையில் இருந்ததால், பேட்டில் லேசாக பந்து உரசியதை அவர் கவனிக்கவில்லை. இதனால், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தும், ராகுல் கள நடுவரிடம், 'தான் அவுட் இல்லை.. பேட் பேடில் தான் பட்டது' என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டுத் தான் சென்றார். அதன்பிறகு அவர் டிரெஸ்ஸிங் ரூம் சென்று மானிட்டரில் பார்த்த பிறகு, தான் அவுட் என்பதையே நம்பினார்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதையடுத்து ஐசிசி நடத்தை விதிகளை மீறும் வகையில் களத்தில் நடந்து கொண்டதிற்காக கே.எல்.ராகுலிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்மீதான குற்றத்தையும் ராகுல் ஒப்புக்கொண்டுள்ளதால், அவர் மேற்கொண்ட விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement