
இந்திய கிரிக்கெட் ஆனது நூறு வருட பாரம்பரியத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெறுவது என்பது அவ்வப்போது அரிதாக நடக்கும் ஒன்றுதான் . இந்திய அணிக்காக பல வெற்றி கேப்டன்கள் இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் வெற்றியை தேடி தந்தவர்கள் சிலரே .
இந்திய அணிக்கு வெளிநாடுகளில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் என்றால் அது கங்குலி தான். கங்குலி அமைத்துக் கொடுத்ததை வைத்து அதை கட்டமைத்தவர் எம் எஸ் தோனிஆவார்.தோனி கட்டமைத்ததை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் விராட் கோலி . விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி 2000 களில் இருந்து ஆஸ்திரேலியாவை போலவே உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது என்றால் மிகையாகாது.
இந்திய கிரிக்கெட் அணியை பல சிறந்த வீரர்கள் வழி நடத்தி இருந்தாலும் ஒரு சில கேப்டன்கள் தான் கிரிக்கெட்டின் மூன்று வடிவ போட்டிகளிலும் வெளிநாடுகளில் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்கள் விரேந்தர் சேவாக் எம் எஸ் தோனி விராட் கோலி அஜிங்கிய ரஹானே மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அவர் . இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .