
KL Rahul on India's top-order wobble against Zimbabwe (Image Source: Google)
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஜிம்பாப்வேவை 161 ரன்களுக்குக்கு சுருட்டியது.
இதை அடுத்து களமிறங்கி இந்திய அணி எளிதாக வென்றாலும் அடுத்தடுத்த ஐந்து விக்கெட் இழந்து சற்று தடுமாறி, முடிவில் 25.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் கே எல் ராகுல் தொடக்கவீரராக களமிறங்கியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் இளம் வீரர்களின் வாய்ப்பை பிடுங்கிக் கொண்டு சுயநலமாக முடிவு எடுத்து உள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடக்க வீரராக களம் இறங்கியும் ராகுல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களை மேலும் வெறுப்படைய செய்துள்ளார்.