
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து காயம் காரணமாக பல தொடர்களை தவறவிட்ட கே.எல் ராகுல் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த ஜிம்பாப்வே தொடரிலும் இடம்பெறாதது சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணிக்காக விளையாடிய கேஎல் ராகுல் 5 மாதங்களுக்கும் மேலாக தற்போது இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது கே.எல் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவான ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.