Advertisement

சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்!

சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 22, 2023 • 12:22 PM
 சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்!
சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயா மூன்றாவது ஒருநாள் போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியானது இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்களையும், திலக் வர்மா 52 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே குவித்தது. 

Trending


இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரில் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல், “இப்படி இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் மீண்டும் தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போதுள்ள இளம் வீரர்கள் நிறைய ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். 

ஆனால் தற்போது அவர்களே சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கவும் நன்றாக இருக்கிறது. இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் கூறியது ஒரே ஒரு விசயம் தான். மகிழ்ச்சியுடன் உங்களது திறமையை களத்தில் வெளிப்படுத்துங்கள். முடிவுகளை பற்றி யோசிக்காமல் உங்களது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று கூறினேன். அந்த வகையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

அணியில் இடம்பெற்ற அனைவருமே தங்களது பங்களிப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது மீண்டும் அவர் அணியில் இடம்பெற்று டாப் ஆர்டரில் களமிறங்கி மிகச்சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement