
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 14ம் தேதி துவங்க உள்ளது.
ஒருநாள் தொடரை மிக மோசமாக இழந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரிலாவது வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் இந்தியா – வங்கதேசம் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரோஹித் சர்மா, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்கள் காயம் காரணமாக விலகியதால் நவ்தீப் சைனி போன்ற, அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இடது கை பந்துவீச்சாளரான ஜெயதேவ் உனாட்கட்டிற்கும் வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.