ஜிம்பாப்வே போட்டிக்கு தயாராகும் விதமாக மெல்போர்னில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலி சக அணி வீரர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழா காணொளி பிசிசிஐ தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதல் விராட் கோலி தனது வெற்றிக்கு காரணமாக இருந்த நபருக்கு கேக் ஊட்டி விட்டு கொண்டாடினார்.
விராட் கோலி கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் 2022 செம்படம்பர் மாதம் வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறை கூட சதம் விளாசவில்லை. தாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூட விராட் கோலி பல பேட்டியில் கூறி இருந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2 மாதங்கள் விலகி இருந்தார்.
இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் மனோ தத்துவ நிபுணராக மீண்டும் பணியில் சேர்ந்தார் பேடி அப்டான். பேடி அப்டான் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அதன் பிறகு டிராவிட்டின் அறிவுறுத்தலின் படி, பேடி உப்டான் இந்திய அணியில் வந்து இணைந்தார்.