
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
இதில், விராட் கோலி, ஷுப்மன் கில், முகமது ஷமி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல் பெயர் இடம் பெறவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியா வீரர் ஷுப்மன் கில் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1584 ரன்கள் குவித்துள்ளார். அதோடு, 24 கேட்சுகளும் பிடித்துள்ளார். ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கில் 5ஆவது இடம் பிடித்தார்.
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (1996, 1998), ராகுல் டிராவிட் (1999), சவுரவ் கங்குலி (1999) ஆகியோர் அதிக ரன்கள் குவித்துள்ளனர். மேலும் கில் ஒரு இரட்டை சதம், 5 சதங்கள் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் விளையாடி 354 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷுப்மன் கில் 208 ரன்களை குவித்து, இளம் வீரராக இரட்டை சதம் அடித்தார்.