
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சீனியர் வீரருமான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஃபார்முக்கு திரும்ப முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும் நடப்பு இங்கிலாந்து தொடரிலும் அவரால் சரிவர சோபிக்க முடியவில்லை.
இதனால் விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்த நிலையில், ரோஹித் சர்மா அவருக்கு ஆதரவு வழங்குவது போல் பேசினார். இந்த நிலையில், விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் போட்டி தொடங்குவதற்கு முன்பே இது குறித்த தகவல் தெரிய வரும்.