
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதற்கு முன்னர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். இருப்பினும் நட்சத்திர வீரர்கள்டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
அதேசமயம் இந்த வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் மூத்த வீரர் அஜிங்கியா ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது அவரது அடிப்படை விலையன ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முன்னதாக கடந்த சில சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட ரஹானேவை, இந்த ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அணியில் இருந்து விடுவித்திருந்தது. அவர் தற்போது 36 வயதை எட்டியது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.