
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடபாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று வரும் இரண்டாவது காலிறுதிச்சுற்று போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது முஷீர் கானின் அபாரமான இரட்டைச் சதத்தின் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 384 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பரோடா அணியில் ஷஸ்வாத் ராவத் மற்றும் கேப்டன் விஷ்ணு சோலங்கி ஆகியோரது சதத்தின் மூலமாக அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் 348 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 32 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் ஹர்திக் தோமர் சதமடித்த அசத்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதிலும் குறிப்பாக முஷீர் கான் 33, பிரித்வி ஷா 87, சாம்ஸ் முலானி 54 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 337 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனைத்தொடர்ந்து கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே - தனுஷ் கோட்யான் இணை யாரும் எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.