
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகல் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன்களையும், வில் யங் 19 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 16 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா, வநிந்து ஹசரங்கா, நுவான் துஷாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.