
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதில் சஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தோல்வியை தழுவியது. மற்ற அனைத்து போட்டிகளிலும் வென்று அசத்தியது.
இதே போன்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் சுருட்டி, இந்திய அணி 14 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டி, அண்டர் 19 டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது. சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ சார்பில் 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அண்டர் 19 பிரிவில் நடத்தப்படும், ஆடவருக்கான 50 ஓவர் உலகக்கோப்பையையும், மகளிருக்கான டி20 உலகக்கோப்பை என இரண்டிலும் இந்தியா தான் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதனிடையே மகளிர் இந்திய அணிக்கு சீனியர் ஆடவர் அணி நெகிழ்ச்சியான விசயம் ஒன்றை செய்துள்ளது.