
சமீபத்தியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி அசத்தினார்.
குறிப்பாக இந்த தொடரில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட பவர் பிளே பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், பவர் பிளே ஓவர்களிலேயே அட்டாக்கில் வந்து விக்கெட்டை வீழ்த்தியவர் ரவி பிஷ்னாய். லெக் ஸ்பின்னர் என்றாலும் பெரியளவில் ஸ்பின் செய்யாமல் அதிகளவிலான கூக்ளி பந்துகளை வீசியே விக்கெட்டை வீழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் 699 புள்ளிகளை பெற்று ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3ஆவது இடத்தில் ஹசரங்கா, 4ஆவது இடத்தில் ஆதில் ரஷீத் மற்றும் 5ஆவது இடத்திலும், இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனா உள்ளனர்.