
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 7) நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பான உலக சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி 32 பந்துகளில் 24 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 19 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தார்.
27,000 சர்வதேச ரன்கள்
இந்நிலையில் நாளை நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 78 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை அதிவேகமாக கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விரட் கோலி படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வரை மூன்று வீரர்கள் மட்டுமே 27000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். அதன்படி சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மட்டுமே இதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. .