-mdl.jpg)
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கலே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கலே அணிக்கு ஷெவோன் டேனியல் - லசித் க்ரூஸ்புலெ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷெவோன் டேனியல் 25 ரன்களிலும், க்ரூஸ்புலே 19 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பனுகா ரஜபக்ஷா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய செய்ஃபெர்ட் 18 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 6, கேப்டன் தசுன் ஷனகா 30 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கலே டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜாஃப்னா அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.