
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்த வெற்றிகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகக் கோப்பையின் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஃப்கானிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
தங்களது அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பினையும் ஆஃப்கானிஸ்தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும் வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஆஃப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு வந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், எங்களுக்கு அந்தப் போட்டி நம்பிக்கையளித்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி கிட்டத்தட்ட 300 ரன்கள் குவித்தது.