
டெத் பௌலிங்தான் என்றுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய தலைவலியாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் அந்த பிரச்னையை இலங்கை வீரர் மதீஷா பதிரனாவைக் கொண்டு பெருமளவில் சரிகட்டியிருக்கிறார் கேப்டன் தோனி. இந்த சீசனில் 15 விக்கெட்களை வீழ்த்தியிருக்கும் பதிரனா பிளே-ஆஃப் சுற்றிலும் சென்னையின் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கப்போகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
'குட்டி மலிங்கா' எனச் செல்லமாக அழைக்கப்படும் பதிரனாவின் வளர்ச்சி பற்றியும் அவரது வருங்காலம் பற்றியும் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்கா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன். தேசிய அணிக்காக ஆடும்போது அப்படி உங்களால் ஆட முடியுமா என எனக்குத் தெரியவில்லை. அவரை ரெட்-பால் கிரிக்கெட் ஆட வைக்கக்கூடாது என சொல்பவர்கள் அவர் காயமடைந்து விடுவார் என்ற பயத்தில் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், நான் ரெட்-பால் கிரிக்கெட் ஆடும்போது இப்படி யாரும் என்னை எச்சரிக்கவில்லை.