
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது,
அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேசம் - ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர், நியூசிலாந்து - பாகிஸ்தான் தொடர்களில் சிறப்பாக செயல்பாட்ட வீரர்கள் இந்த பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதான்படி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானி ஐசிசி சிறந்த வீரர் விருதுகான பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரைத்தவிர்த்து இத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயால்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற வங்கதேச ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதில் அவர் இரண்டாவது டெஸ்டில் சதமடித்து அசத்தியதுடன் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.