Advertisement

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு - கௌதம் கம்பீர்!

பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெற்றி பெறுவது பற்றி மட்டும் உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதில் எங்கள் அணி கவனம் செலுத்துகிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisement
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு - கௌதம் கம்பீர்!
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு - கௌதம் கம்பீர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 02, 2025 • 12:57 PM

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 02, 2025 • 12:57 PM

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Trending

இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெற்றி பெறுவது பற்றி மட்டும் உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதில் எங்கள் அணி கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது மட்டுமே முக்கியமான போட்டி என்று நாங்கள் எண்ணவில்லை. இத்தொடரில் நாங்கள் விளையடௌம் அனைத்து போட்டிகளும் முக்கியமானது என நினைக்கிறேன். மேலும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நாங்கள் துபாயில் விளையாடவுள்ள காரணத்தால், ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் மட்டும் வெற்றிபெறுவது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை.

ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதற்கு நடுவில் அந்த போட்டியிலும் நாங்கள் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதால் முடிந்தவரை அதனை தீவிரமாக எடுத்துக்கொள்வோம். மேலும் முக்கியமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும்போது, ​​உணர்ச்சிகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எனக்கு தெரியும், ஆனாலும் போட்டி அப்படியே தான் இருக்கும்.

Also Read: Funding To Save Test Cricket

50 ஓவர் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முற்றிலும் மாறுபட்ட சவாலாகும், ஏனென்றால் இங்கு நாம் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இந்த தொடரில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.  எனவே நாங்கள் மிகவும் சிறப்பாகத் தொடங்குவோம் என்று நம்புகிறோம், ஏனெனில் இத்தொடரில் நாங்கள் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் எனில், 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement