
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி மட்டும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் காயம் காரணமாக இலங்கை தொடரில் இடம்பிடிக்காமல் இருந்த பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது காயத்தை சந்தித்த ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம்பிடித்த நிலையில், மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.