
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய டெக்ஸாஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டூ பிளெசிஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம்ளித்தார். அதன்பின் களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர் 6, கோடி செட்டி 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கான்வே - மிலிந்த் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 37 ரன்களில் மிலிந்த் குமாரும், 38 ரன்களில் டெவான் கான்வேவும் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூயார்க் அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.