
Moeen Ali names India player as one of his 'favourite cricketers' in the world (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், குழந்தை பிறப்பு காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக ஆல்ரவுண்டர் மொயீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைக்கேப்டன் பதவி ஏற்றதை தொடர்ந்து தற்போது தான் எவ்வாறு செயல்பட போகிறேன் என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் பேசிய மோயீன் அலி, “இங்கிலாந்து அணிக்காக எந்த ஒரு வடிவத்திலும் கேப்டன் பதவியோ அல்லது துணை கேப்டன் பதவியோ கிடைப்பது மிகப்பெரிய கவுரவம். அந்த வகையில் எனக்கு துணை கேப்டன் பதவி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு அற்புதமான தருணம்.