
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்தாண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் முகமது கைஃப், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஃபகர் ஸமான் மட்டுமே கொஞ்சம் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறார். இறுதிக்கட்டத்தில் இஃப்திகார் அஹ்மது கொஞ்சம் வேகமாக விளையாடுகிறார். மற்ற பேட்டர்கள் அனைவரும் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடுகிறார்கள்.