கரோனாவிலிருந்து மீண்டார் முகமது ஷமி; இந்திய அணியில் ரீ எண்ட்ரி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கரோனா தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான கடைசி வாய்ப்பு என்பதால் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ள போதிலும், பவுலிங் தான் சற்று சொதப்பலாக உள்ளது. கரோனா காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியிருந்த முகமது ஷமி, இந்த தொடரில் இருந்தும் வெளியேறுவார் என தகவல் வெளியானது. இதனால் அவருக்கு மாற்று வீரராக உமேஷ் யாதவ் இருந்து வருகிறார்.
இந்நிலையில் முகமது ஷமி தனது உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது அவர் கரோனாவில் இருந்து பூரண குணமடைந்துவிட்டதாகவும், நெகட்டீவ் முடிவு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் இன்று நடைபெறும் முதல் டி20 போட்டிக்கு வந்துவிடுவாரா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.
முகமது ஷமி அடுத்ததாக இதய ரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். மேலும் உடற்தகுதி தேர்வுகளும் சில வைக்கப்படவுள்ளன. இதில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே ஷமி டி20 உலகக்கோப்பை அணியிலாவது இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now