
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது போன்ற கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருவதோடு தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு தேவையான அறிவுரைகளையும் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்கொள்வதற்கு இந்திய அணி முழு திட்டத்துடன் தயாராக உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.