
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி போட்டி பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்பின் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஸ் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த ஸ்டீவன் ஸ்மித் 11, மேக்ஸ்வெல் 23 என இருவரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினாலும், மறுமுனையில் ஆரோன் ஃபிஞ்சின் மிக சிறப்பான ஆட்டத்தின் மூலம் கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை ஆஸ்திரேலிய அணி வந்தது.