
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பந்துவீச களமிறங்கும் முன்னரே மழை பெய்ததால் போட்டி 40 நிமிடங்கள் வரை தாமதமானது. பின்னர் போட்டி தொடங்கியதும் முதல் ஓவரிலேயே மூன்றாவது பந்தில் குசால் பெரேராவை ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா வெளியேற்றி இருந்தார்.
இதன் காரணமாக இலங்கை அணி ஒரு ரன்னுக்கே ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் நான்காவது ஓவரை வீச வந்த முகமது சிராஜ் அந்த ஓவரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர்களில் யாரும் நிகழ்த்தாத ஒரு அரிதான சாதனையை நிகழ்த்தி அசத்தியதோடு மட்டுமின்றி இலங்கை அணியின் தோல்வியையும் அந்த ஒரு ஓவரிலேயே உறுதி செய்தார்.