
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதீஷ் ராணா ஆகியோர் சிறப்பாக விளையாடிய வேளையில் இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தாவின் தோல்வி உறுதியானது.
அந்த நேரத்தில் கடைசி ஓவரின் போது 6 பந்துகளுக்கு 29 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது. இதன் காரணமாக நிச்சயம் கொல்கத்தா அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி ஓவரின் 5 பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்கு விளாசிய கொல்கத்தா அணியின் இளம் வீரரான ரிங்கு சிங் அபாரமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.