
இந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தவிர்க்க முடியாத இடத்தை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிடித்திருக்கிறார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனி பெற்றிருக்கிறார். மேலும் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தோனி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத விஷயங்கள் குறித்து ரசிகர்களிடையே உரையாற்றினார். அதில், பேசிய அவர், “என்னை யாராவது அதிர்ஷ்டசாலி என்று சொன்னால் நான் அதை மகிழ்ச்சியாக ஏற்பேன். ஏனென்றால் எனக்காக பல கோடி பேர் ஆதரவாகவும் பிரார்த்தனையும் செய்கிறார்கள். என் மீது அவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள்” என்று ரசிகர்களை நினைத்து தோனி உருக்கமாக பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணி குறித்து பேசிய தோனி, “நான் விளையாடும் காலத்தில் நாடு தான் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. என்னுடைய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் எப்போதுமே நினைப்பேன். வெற்றி வரும்போது நாம் விண்ணில் பறக்க கூடாது.