
ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக 2020ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வரவில்லை. இவர்கள் விளையாடாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது.
அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரது இடத்தையும் ஒருவரே நிரப்பும் வகையில் இங்கிலாந்து ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டர் மொயின் அலியை வாங்கி வந்தது. 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் சென்றது. பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் பொழுது இவரைத் தக்கவைத்தும் கொண்டது.
இந்நிலையில், குணாதிசயங்களில் ஒன்று போலவே இருக்கும் இங்கிலாந்து அணிக்காக முதன்முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இயான் மோர்கன் மற்றும் இந்திய அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பைகளை வென்ற மகேந்திர சிங் தோனி இருவரையும் ஒப்பிட்டும், இருவருக்கு இடையேயான வித்தியாசங்களையும் பேசி இருக்கிறார்.