
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் புகழும், மார்க்கெட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாயம், கிரிக்கெட் அகாடமி, சினிமா தயாரிப்பு, ஏற்றுமதி, விளையாட்டு என்று ஏராளமான முதலீடுகளை தோனி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தோனி தன்னுடன் விளையாடிய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர காரணம் என்று ஏராளமான வீரர்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். குறிப்பாக 2007 முதல் 2011 வரை தோனியுடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் இப்படி கூறிய விவகாரம் குறித்து பார்க்கலாம்.
அதில் முதல் வீரராக 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய கம்பீர், தோனியை ஏராளமான முறை கடுமையாக சாடியுள்ளார். சமூக வலைதளங்களில் தோனியை புகழ்ந்து பேசினால், சர்ச்சை புகைப்படத்தையோ, ட்வீட்டையோ பகிர்வார். இது கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது.