
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறிய இந்திய அணி இம்முறை வெற்றி பெறும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் கடந்த முறை வந்தபோது நியூசிலாந்து அணி இடம் தோல்வியை தழுவி வெளியேறியது. ஆகையால் இம்முறை வெற்றி பெறும் முனைப்பில் முதலில் பவுலிங் செய்தது. இந்திய அணிக்கு அந்த முடிவு எந்த வகையிலும் சாதகமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் அடிக்க, இந்திய அணி 296 ரன்களுக்கு அளவுக்கு ஆனது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிசையில் ஆஸ்திரேலியா அணி 270 ரன்கள் அடித்து 443 ரன்கள் முன்னிலை பெற்றது. இவ்வளவு பெரிய இலக்கை இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சேஸ் செய்தது இல்லை இருப்பினும் நம்பிக்கையுடன் சேஸ் செய்த இந்திய அணி நான்காம் நாள் முடிவில் 164 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து, களத்தில் விராட் கோலி மற்றும் ரஹானே இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
ஐந்தாம் நாளில் இவர்கள் இருவரும் நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் செல்வர் என எதிர்பார்த்து இருந்தபோது, ஐந்தாவது நாளில் வெறும் ஐந்து ரன்கள் அடித்து அவுட் ஆனார் விராட் கோலி. மொத்தமாக இரண்டாவது இன்னிங்சில் 49 ரன்கள் அடித்திருந்தார். அடுத்ததாக ரகானே 46 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க, 234 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. இதனால் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை வந்து கோப்பையை இழந்துள்ளது இந்திய அணி.