Advertisement

ஐபிஎல் 2021: பிசிசிஐ-யின் முடிவை பாரட்டிய ரோஹித்!

ஐபிஎல் குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.

Advertisement
Mumbai Indians Captain Rohit Sharma Appreciate BCCI's decision
Mumbai Indians Captain Rohit Sharma Appreciate BCCI's decision (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2021 • 09:50 PM

கரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில், பிசிசிஐயின் முடிவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பாராட்டி உள்ளார் . 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2021 • 09:50 PM

மும்பை இன்டியன்ஸ் அணி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலி மூலம் ரோகித் இதனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா“எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பார்த்தால் தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐயின் முடிவு நல்லதொரு முடிவு என சொல்லலாம். அரசு சொன்ன விதிகளை பின்பற்றி கரோனாவை விரட்டி அடிப்போம்” என தெரிவித்துள்ளார். 

பயோ பபுளில் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement