
இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய். இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். அதுமட்டுமல்லாமல் இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவை எழுந்ததோ, அப்போதெல்லாம் ரவி பிஷ்னாய் பந்துவீச அழைக்கப்பட்டார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவர் மீது வைத்த நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் காப்பாற்றி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய டி20 அணியின் நிரந்தர ஸ்பின்னராக ரவி பிஷ்னாய் பார்க்கப்பட்டு வருகிறார்.
லெக் ஸ்பின்னர் என்றாலும் பெரியளவில் ஸ்பின் செய்ய முடியாத ரவி பிஷ்னாய், அதிகளவிலான கூக்ளி பந்துகளை வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். அதேபோல் இவர் ஏர் ஸ்பீட் ரஷீத் கானை விடவும் கூடுதல் வேகத்தில் இருப்பதால், இவரது கூக்ளிகளை கண்டுபிடிக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் ரவி பிஷ்னாய்-க்கு சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.