
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணியும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன.
இதில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனது விரலில் ஏற்பட்டுள்ள எழும்பு முறிவின் காரணமாக வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.