
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவாமல் 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது. அதேசமாயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இரண்டாவது தோல்வியைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் அக்ஸர் படேல், “அணி விளையாடும் விதத்தைப் பார்த்தால், எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கையும் வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போட்டியில் எதிரணி வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது பிடிக்கும், எனவே ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சைப் பயன்படுத்துவது ஒரு நல்ல வழி என்று நான் உணர்ந்தேன்.