
நேபாளில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரில் நேபாள், நமீபியா மற்றும் நேதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் நேபாள் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லின்கென் - மாலன் குருகர் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
பின்னர் மைக்கேல் வான் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோட்ஸி 11 ரன்களிலும், ஜான் ஃபிரைலிங் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் குருகருடன் இணைந்த நிகோல் லோஃப்டி-ஈடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களும் விளாசினார். இதில் க்ரூகர் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோல் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தியது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். இப்போட்டியில் 36 பந்துகளை எதிர்கொண்ட நிகோல் லோஃப்டி ஈடன் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 101 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை குவித்தது.