
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தின் சாட்டாகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது டிக்ளேர் செய்வதாக அறிவித்து, வங்கதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா மற்றும் சுப்மன் கில ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.