
நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் சந்தீப் லாமிச்சானே. இவர் நேபாள் கிரிக்கெட் அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது 23 வயதான சந்தீப் லாமிச்சானே, கிரிக்கெட்டில் பெரிய உயரத்தை தொட்டு, நேபாளத்துக்கு பெருமை சேர்த்து தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச காவல்துறை (இண்டர்போல்), அவரை தேடும் அளவுக்கு குற்றவாளியாக மாறிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணம் 17 வயது சிறுமி அளித்துள்ள பாலியல் பலாத்காரம் புகார் தான்.
கடந்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நண்பர் ஒருவர் மூலம் சந்திப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்திப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.