
நெதர்லாந்து, நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நேபாளில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி கீர்த்திபூரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் குஷால் புர்டெல் - ஆசிஃப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் குஷால் புர்டெல் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் படெலும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய குல்சன் ஜாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆசிஃப் ஷேக் 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழ்கக, குல்சன் ஜாவும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களில் குஷால் மல்லா மட்டும் 26 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.