
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. எதிரணிக்கு கொஞ்சம் கூட நெருக்கடி கொடுக்காமல் நமது அணி முழுமையாக அடி பணிந்ததை பார்த்து ரசிகர்கள் உடைந்து போயினர்.
நேற்று துபாயில் நடந்த வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. இந்த தொடரில் உண்மையான ஹிரோ டாஸ் என்பதால் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மிகவும் உற்சாகமாக முதலில் பந்துவீசுகிறோம் என்று கூறினார். அதே போல் நியூசிலாந்து பவுலர்கள் உற்சாகமாக பந்துவீச இந்திய வீரர்கள் விக்கெட்டுக்கும், பெவிலியனுக்கும் அணிவகுப்பு நடத்தினார்கள்.
கிட்டத்தட்ட நியூசிலாந்து வீரர்களுக்கு கேட்ச் பயிற்சி கொடுப்பதுபோல் பந்தை அவர்களின் கையில் தூக்கி கொடுத்து வரிசையாக நடையை கட்டினார்கள். மிக மோசமாக 20 ஓவர்களில் 110 ரன்களே இந்தியா எடுத்தது. பேட்டின்ங்கில் சொதப்பினாலும் பவுலிங்கிலாவது நெருக்கடி கொடுப்பார்கள் என்று பார்த்தால் ஏதோ வேண்டா வெறுப்பாக பந்து வீசினார்கள்.