ஐபிஎல் 2023: கேகேஆர் அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அந்த அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.

Nitish Rana will lead Kolkata Knight Riders in the absence of Shreyas Iyer! (Image Source: CricketnMore)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனும், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரது பங்களிப்பு சந்தேகமாகவே உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்ந்தார். அதேபோட்டியில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், என்சிஏவின் ஆலோசனையை ஸ்ரேயாஸ் ஐயர் மறுத்து விட்டதாக தெரிகிறது. தற்போது மருத்துவர்களில் ஆலோசனைப்படி வீட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் ஓய்வெடுத்து வருகிறார். இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலக இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அடுத்த கேகேஆர் கேப்டன் பதவிக்கான லிஸ்ட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் ஷர்துல் தாக்கூருக்குதான் அணி நிர்வாகம் முழு ஆதரவுடன் கேப்டன் பதவி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கொல்கத்தா அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐஎல்டி20 லீக்கில் கேகேஆர் உரிமையாளரான அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியை சுனில் நரைன் வழிநடத்தினார். அவரது தலைமையிலான அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று கடைசி இடத்தை பிடித்தது.
இதன் காரணமாகவே கொல்கத்தா அணி தலைமையை சுனில் நரைனுக்கு வழங்வில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது புதிய கேப்டனின் பெயரை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்ற நிலையில், நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை அணியை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News