
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கான முக்கிய தொடர் இதுவாகும். எனவே இதுகுறித்து பேச நேற்று கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஸ்டரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கேஎல் ராகுல் மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் 122 தான் அவரின் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. இது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு காரசாரமான பதிலை அவர் கொடுத்தார். அதில், “இங்கு எந்த வீரருமே மிகச்சரியானவர்கள் அல்ல, ஒவ்வொரு வீரருக்கும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். அதற்காக பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் எப்போதுமே அதே ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆட வேண்டும் என்று யாருமே எதிர்பார்க்கக்கூடாது. இதுவரை எவருமே கரியர் முழுவதும் அதே ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்ததும் கிடையாது. சில சமயங்களில் குறையதான் செய்யும்.