
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடர் குறித்து தான் தற்போது சர்வதேச அளவில் பேச்சுக்கள் உலா வருகிறது.
உலகில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் என பல நாடுகளும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடத்தினாலும் இந்தியாவின் ஐபிஎல் தொடர், பிரபலத்திலும், பணம் புழக்கத்தில் டாப்பில் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய ஒன்று தான், ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் உள்ள ஒன்று ஐபிஎல்-ல் இல்லை என வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர்,“பல்வேறு நாடுகளில் இருந்தும் உலகின் தலைசிறந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர். அது வேற லெவல் போட்டி தான். ஐபிஎல் தொடரை நடத்தும் விதம், வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவை முற்றிலும் மாறுபட்டது. அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஆனால் ஐபிஎல்-க்கு அடுத்தபடியாக சிறந்த கிரிக்கெட் தொடர் என்றால் அது பிஎஸ்எல் மட்டும் தான். அது நிருபனம் ஆகியுள்ளது.