
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் ஷிகர் தவான் தான்.
கடந்த 2 வருடங்களாகவே அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வரும் ஷிகர் தவான், இலங்கை தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என ஏதேனும் ஒரு சில தொடர்களுக்கு மட்டும் திடீரென அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் இடத்தில் கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸுடனான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 97 ரன்கள் அடித்து தன்னை நிரூபித்தார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால் ரோகித் சர்மா உடனான பிரச்சினை உள்ளது.
ரோஹித் சர்மா இந்திய அணியின் பேட்டிங் திட்டத்தை மாற்ற முயற்சித்து வருகிறார். அதாவது, ஆட்டத்தின் முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடி பவர் ப்ளேவில் அதிக ஸ்கோர் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். 50 ஓவர் கிரிக்கெட் என்பது டி20 கிரிக்கெட்டின் மற்றொரு அங்கம் தான். டி20 கிரிக்கெட்டை விட, ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஸ்க் குறைவாக எடுக்கலாம். ஆனால் ரிஸ்க் எடுத்து அதிரடியாக தான் விளையாடி ஆக வேண்டும் எனக் கூறி வருகிறார்.